Wednesday, February 9, 2011

தமிழினம் பெருமைகொள்ள சில நிகழ்வுகள்

தமிழ் ஈழம் காத்த... தமிழக மீனவர்களை கடிதம் மட்டுமே எழுதி காப்பாற்றிய  பெருமை என்ன ..?  காவிரி பிரச்சனைக்கு கடிதம் எழுதி தீர்வு கண்டது என்ன ...
கச்சத்தீவினை மீட்ட வீரம் என்ன ?  விருப்ப வீட்டு மனை ஒதுக்கேடு மூலம்  நலிந்தோர்க்கு உதவிய நல்லெண்ணம் என்ன ? நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்க  மானாட மயிலாட ரசிக்கும் பாங்கும் , சலூன் கடை திறக்கவும் , தமிழ் சினிமாவினை உலகத்தரத்திற்கு உயர்த்தும் படங்களுக்கு
வசனம் எழுதும்  மனப்பாங்கு என்ன  ?  ரெய்டு நடந்தது அவமானம் இல்லையா என்றால் உங்க வீட்டில் நடந்ததா என்று பதில் தந்த சாமர்த்தியம் என்ன ?
ஊழல் வழக்கில் கைதானவருக்கு மாவீரன் பட்டம் வழங்கிய பெருமை என்ன ..?  நடிகை தமன்னாவிற்கும் அனுஷ்காவிற்கும் கலைமாமணி வழங்கி பெருமிதம் கொண்டது என்ன ?

No comments:

Post a Comment